Date:

சந்தையில் மீண்டும் உயர்ந்த அரிசி விலை

கடந்த வாரத்தில் சந்தையில் அனைத்து வகையான அரிசிகளின் விலைகளும் மீண்டும் உயர்வடைந்துள்ளன.

இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதால் உள்நாட்டு அரிசிகளை விற்பனை செய்வது பாரிய சவாலாக உள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் சம்பா அரிசி கிலோ ஒன்று 165 ரூபாவுக்கும், நாட்டரிசி கிலோ ஒன்று 148 ரூபாவுக்கும் வெள்ளை அரிசி 157 ரூபாவுக்கும் சிவப்பரிசி 161 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது வெள்ளை அரிசியை தவிர ஏனைய அனைத்து அரிசி வகைகளின் விலைகளும் 5 ரூபாவுக்கும் அதிக தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறிப்பிட்டளவில் குறைந்து காணப்படுகின்றது.

அதற்கமைய, பொன்னி சம்பா கிலோ ஒன்று 126 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 120 ரூபாவுக்கும் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி 122 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், நுகர்வொர் உள்நாட்டு அரிசிகளை கொள்வனவு செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...

அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...