Date:

இலங்கையின் முக்கிய வைரஸாக மாறிய ஒமிக்ரோன்-சந்திம ஜீவந்தர

நாட்டில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்திருந்தவர்கள் என்றும் அவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கிணங்க நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...