நேற்றுமாலை(13) பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது. வண்டியைக் குழந்தையின் தாயே செலுத்தியதாகவும் அவருக்குச் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த குறித்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு ஆண் ஆகியோர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.