எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்;.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை மற்றும் மாதாந்தம் காணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்ந்தே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் என அவர் கூறுகின்றார்.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில், தம்மால் தற்போதே கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
வைரஸின் செயற்பாடுகள் குறித்து தாம் ஆலோசனைகளை வழங்குகின்ற போதிலும், எதிர்காலம் தொடர்பில் தம்மால் கூற முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவிக்கின்றார்.