Date:

ஊடகவியலாளரான ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம்

மலையக ஊடகவியலாளரான கிருஸ்ணசாமி ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் MediaInc திட்டத்தில்  கிருஸ்ணசாமி ஹரேந்திரன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி ஒளி,ஒலிபரப்பு நிறுவனங்களில் பல சிரேஸ்ட பதவிகளை வகித்துள்ள கிருஸ்ணசாமி ஹரேந்திரன், பி.பி.சீ போன்ற உலகின் முதனிலை செய்தி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

சமூகம் சார்பான கரிசனையை அதிகளவில் வெளிப்படுத்தும் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் பல்வேறு மக்கள் போராட்டங்களில் இன்றியமையா ஊடகப் பங்களிப்பினை களத்திலிருந்து வழங்கியுள்ளார்.

உளவள ஆலோசகர், செய்தியாளர், செய்தி ஆசிரியர், தொகுப்பாளர் சர்வதேச செய்தி சேவை நிறுவனங்களின் இலங்கை செய்தியாளர், தன்னார்வ தொண்டர், யோகா ஆசிரியர், புலனாய்வுச் செய்தியாளர், சமூக செயற்பாட்டாளர் என பல்வேறு பரிமாணங்களில் தனது மண்ணுக்கும், மக்களுக்கும் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் வழங்கி வரும் சேவை மென்மேலும் பல்கிப்பெருக வேண்டுமென எமது  நியூஸ் தமிழ் இணைய ஊடகவலையமைப்பின் சார்பில் வாழ்த்துவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...