கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் அமரசேன,
வர்த்தமானி ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது.தற்போதைய ஆளும் கட்சி முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த போது தேர்தல் ஒன்றை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
அரசாங்கம் தமது பதவி காலத்தில் மேலும் 2 வருடங்களுக்கு பொதுசன வாக்கெடுப்பின் ஊடாக அதிகரித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடத்தி மக்களின் நாடியை அறிந்துகொள்வதே உசிதமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அதிவிசேட வர்த்தமானி ஊடாக உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் நீடிக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.