கடந்த ஒக்டோபர் மாதம்,சீன நிறுவனமொன்றினால் இறக்குமதி செய்யத் தீர்மானித்த பணம் சேலுத்த்துகையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சீனாவின் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்ட சேதன உரத்திற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியின் ஊடாக வௌியிடப்பட்டன. இலங்கையின் தாவர தனிமைப்படுத்தல் சேவை, உர மாதிரிகளை பரிசோதித்த பின்னர், உர மாதிரிகளில் அர்வினியா பக்டீரியா இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் குறித்த நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தனது கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.