Date:

இலங்கை பத்திரிகை துறை மூடப்படும் அபாயத்தில்?

பத்திரிகைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் கடதாசிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறைக்கு தேவையான கடதாசிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், உலக சந்தையில் கடதாசிகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

450 டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் கடதாசி, தற்போது 800 டொலர் வரை அதிகரித்துள்ளது.

இதனால், இலங்கையில் பத்திரிகைக்கு தேவையான கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அச்சிடப்படும் பெரும்பாலான பத்திரிகைகள், பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சில பத்திரிகை நிறுவனங்கள் சில பத்திரிகைகளில் வெளியாகும் சஞ்சிகைகளை அச்சிடும் நடவடிக்கையை நிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது,

குறிப்பாக எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்கு தேவையான கடதாசிகள் மாத்திரமே கைவசம் உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், பத்திரிகைகளில் வேலை செய்யும் பலரது வேலை வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயமும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...