Date:

இலங்கை பத்திரிகை துறை மூடப்படும் அபாயத்தில்?

பத்திரிகைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் கடதாசிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறைக்கு தேவையான கடதாசிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், உலக சந்தையில் கடதாசிகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

450 டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் கடதாசி, தற்போது 800 டொலர் வரை அதிகரித்துள்ளது.

இதனால், இலங்கையில் பத்திரிகைக்கு தேவையான கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அச்சிடப்படும் பெரும்பாலான பத்திரிகைகள், பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சில பத்திரிகை நிறுவனங்கள் சில பத்திரிகைகளில் வெளியாகும் சஞ்சிகைகளை அச்சிடும் நடவடிக்கையை நிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது,

குறிப்பாக எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்கு தேவையான கடதாசிகள் மாத்திரமே கைவசம் உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், பத்திரிகைகளில் வேலை செய்யும் பலரது வேலை வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயமும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373