எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து இலங்கை பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாகதீப புராண ரஜமகா விகாரையின் பிரதம தலைமை தேரர், நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.