Date:

”இனி கேஸ் வாங்க, ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்”?

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில், விற்பனை முகவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

”ஒருவருக்கு ஒரு சிலிண்டர் மாத்திரம். எரிவாயு கொள்வனவு செய்ய மின்சாரம் அல்லது நீர் கட்டண பற்றுச்சீட்டு கொண்டு வர வேண்டும். (நவம்பர் மாத கட்டண பற்றுச்சீட்டு” என அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பதிவை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், வேறு பகுதிகளுக்கு சென்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையினால், குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தவிர்க்கும் வகையிலேயே, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...