Date:

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட மேலும் ஒரு ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியம் தொடர்பில் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட மேலும் ஒரு ஒப்பந்தம் உள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாகவே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மைமை நிர்வாகத்தை இந்தியாவிற்கு கையளிக்கும் நோக்கிலேயே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற புதிய நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.

எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று எதிர்காலத்தில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...