Date:

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட மேலும் ஒரு ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியம் தொடர்பில் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட மேலும் ஒரு ஒப்பந்தம் உள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாகவே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மைமை நிர்வாகத்தை இந்தியாவிற்கு கையளிக்கும் நோக்கிலேயே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற புதிய நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.

எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று எதிர்காலத்தில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...