பால்மா தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களுக்காக சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றமையினால், சில சிற்றுண்டி உரிமையாளர்கள் தேநீர்,பால் விநியோகத்தை நிறுத்தியிருந்தனர்.
பால்மா விலை அதிகரிக்கப்பட்டதனாலேயே தேநீர் விற்பனை செய்வதை தவிர்க்க தீர்மானித்ததாகவும் சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
மேலும் சிற்றுண்டிசாலைகளின் பிரதான வருமான மார்க்கமாக பால் தேநீர் விற்பனை காணப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.