நேற்றிரவு 10.20 அளவில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு காரொன்று தீக்கிரையாகியுள்ளது.
முழுமையாக தீக்கிரையாகி உள்ளதாகவும் தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.