Date:

கிளிநொச்சி வயோதிபப் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்கள்

காணாமல் போயிருந்த கிளிநொச்சி-உதயநகர் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் உரப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக இந்த சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் இருந்த போது அவரை கொலை செய்து, சடலத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று, கந்தபுரத்திலுள்ள பாலமொன்றுக்கு கீழ் வீசிச் சென்றதாகக் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

லண்டனில் தமது மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதான குறித்த பெண், 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியைப் பராமரிப்பதற்காக, வாடகை வீடொன்றில் அவர் தங்கியிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனிமையில் வசித்துவந்த குறித்த பெண், கடந்த 27 ஆம் திகதி வங்கிக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...