Date:

மத்திய வங்கி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இதன் பின்னர், அந்த நாணயத்தாளை வழங்கிய நபர், அவரது வெளி தோற்றம், வாகனத்தில் வந்திருந்தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது அச்சிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்ளை அச்சிடுதல் மற்றும் புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளது எனவும் அது சம்பந்ததமாக உன்னிப்பாக அவதானிக்குமாறும் பொலிஸ் மா அதிபர், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...