ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி சேனரத் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது பிரதமரின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பி.பீ. ஜயசுந்தரவின் ஜனாதிபதி செயாயலாளர் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தியிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பீ. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத்ன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியுமாவார்.