சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கி இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்ததையடுத்தே இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஷீவின் பயோடெக் நிறுவனத்தின் பிரதி முகாமையாளார் ஹெனா சோங்க், இலங்கையிலுள்ள சில நிறுவனங்கள் வேண்டுமென்றே செய்த சில செயற்பாடுகளின் காரணமாக தமது நிறுவனத்தின் பெயருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சரவையில் தமது நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை இணங்கினாலும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் நஷ்டத்திற்காக இலங்கையிடம் கட்டாயம் இழப்பீடு பெற்றே தீர்வோம் என சீனாவின் சேதனப் பசளை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு தேவையான சேதனப்பசளையை வழங்கும் கேள்விமனுவிற்கு 100வீத விலையை வழங்கியுள்ளதாகவும்
இழப்பீட்டு தொகையை பெற வேண்டும் எனவும் நேற்று சீன நிறுவனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.