எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் பால்மா தட்டுப்பாடு நிவர்த்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.