நேற்று இரவு 10மணியளவில் அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தி்ல் துப்பாபாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான பொலிஸாரின் எண்ணிக்கை இதுவரை 4ஆக பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப்பெற்றுவருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.