Date:

போலியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை மூவர் கைது

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போரத்தோட்டை பகுதியில் போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, பணம் பெறும் வியாபாரத்தை முன்னெடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்  விசேட அதிரடியினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட 17 பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள், கணினி மற்றும் 5 கையடக்க தொலைபேசிகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக இவ்வாறு போலி பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 21 முதல் 37 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...