இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கியுள்ளனர்.
இதையடுத்து, இன்று காலை திருப்பதி ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை அவர்கள் நாடுதிரும்ப உள்ளதாகவும் அறியப்படுகின்றது.