Date:

நாளை முதல் தொடரூந்து பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது

தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதனிடையே தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக்கொண்டனர்.

அதேவேளை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...