17 இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 17 இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.
இதன்படி, 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் நேற்று (22) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நன்சான்று பத்திரங்களை கையளித்த உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் விபரங்கள் வருமாறு:
1.சியெரா லியோன் உயர்ஸ்தானிகர் எர்னஸ்ட் மைம்பா (Ernest Mbaimba)
2.ஜோர்தான் தூதுவர் மொஹமட் எல்-கைட் (Mohamed El- Kayed)
3.கொரியா தூதுவர் சோய் ஹுய் சோல் (Choe Hui Chol)
4.ருவாண்டாவின் உயர்ஸ்தானிகர் திருமதி முகங்கிரா ஜாக்குலின் (Mukangira Jacqueline)
5.பொஸ்ட்வானாவின் உயர்ஸ்தானிகர் கில்பர்ட் ஷிமேன் மெங்கோல் (Gilbert Shimane Mangole)
6.மோல்டாவின் உயர்ஸ்தானிகர் ரூபன் கௌசி (Reuben Gauci)
7.ஹங்கேரியாவின் தூதுவர் அண்ட்ரெஸ் லஸ்லோ கைரலி (Andras Laszlo Kiraly)
8.மொரிடானியாவின் தூதுவர் மொஹமட் அஹ்மத் ராரா (Mohamed Ahmed Rara)
9.தூனிசியாவின் தூதுவர் திருமதி ஹயத் தல்பி பிலேல் (Hayet Talbi Bilel)
10.ஆர்ஜென்டினாவின் தூதுவர் ஹியூகோ ஜேவியர் கோபி (Hugo Javier Gobbi)
11.கயானா குடியரசின் உயர்ஸ்தானிகர் சர்ரண்டாஸ் பெர்சாட் (Charrandass Persaud)
12.எகிப்தின் தூதுவர் மகெட் மொஸ்லே நஃபீ (Maged Mosleh Nafei)
13.டொமினிகா குடியரசின் தூதுவர் டேவிட் இம்மானுவேல் பக் (David Emmanuel Puig)
14.நைஜீரியாவின் உயர்ஸ்தானிகர் அகமத் சுலே (Ahmed Sule)
15.இந்தோனேசியாவின் தூதுவர் திருமதி டேவி கஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing)
16.ஸ்பெயினின் தூதுவர் ஜோஸ் மரியா டொமிங்குஸ் (Jose Maria Dominguez)