Date:

எரிபொருள் நிவாரணம் வழங்காவிடின் 25% பேருந்து கட்டண அதிகரிப்பு

அரசாங்கத்திடமிருந்து எரிபொளுக்கான நிவாரணம் கிடைக்காவிடத்து பேருந்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆரம்ப பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கடந்த முறை எரிபொருள் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டபோது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

தற்போது 10 ரூபாவால் அந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் மாத்திரமின்றி பேருந்துக்கான உதிரிப்பாகங்களின் விலைகளும் 300 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் தலையீட்டுடன் முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

நிவாரணம் வழங்கப்படாவிடத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்படும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...