Date:

ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை

எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை வைத்திருப்பதனை கட்டாயமாக்குவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிபா்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்டவர்களுக்கு விசேட செயலி மற்றும் QR CODE வழங்கப்படவுள்ளது.

தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடத்திற்குள் நுழைவதனை தடுக்கும் நடவடிக்கையை அதன் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போடாமல் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை, என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...