Date:

ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை

எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை வைத்திருப்பதனை கட்டாயமாக்குவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிபா்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்டவர்களுக்கு விசேட செயலி மற்றும் QR CODE வழங்கப்படவுள்ளது.

தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடத்திற்குள் நுழைவதனை தடுக்கும் நடவடிக்கையை அதன் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போடாமல் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை, என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...