பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று (20) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய, இந்த விவாதம் நடைபெற உள்ளது.
இன்றும் நாளை மறுதினமும் இதுகுறித்த விவாதம் இடம்பெறும் என முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பிரியந்த குமார தியவடன படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.