Date:

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுமீதான மேலதிக விசாரணைகள் இன்று

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று(17) இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர்கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் விசாரணை தொடரவுள்ளது.

இதேவேளை, யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், அவசியமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கு மின்விநியோகத் தடையை ஏற்படுத்த முடியும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அதன் அரசியல்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...