Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கடந்த வாரம் அமைச்சரவை பத்திரத்தைச் சமர்ப்பித்ததாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையென தெரியவருகிறது.

2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...