Date:

புதிய உர வகை நனோ தொழில்நுட்ப நிறுவகத்தினால் பாிசோதனை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிப்பதற்காக பொட்டாசியம், பொஸ்பேட் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய சேதன உர வகையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது.

இதன் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக நேற்று (14) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பேராசிரியை நிர்மலா கோட்டேகொட, பொஸ்பேட் உரங்களின் பெறுமதியைக் கூட்டி தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய உரக் கலவையைப் பயன்படுத்தி  மேற்கொள்ளப்பட்ட சோளப்பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவித்தார்.

மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களுக்கான இந்தப் புதிய உர வகையை ஈடுபடுத்துவது  தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது வெற்றியடையும் பட்சத்தில், நாட்டில் இயற்கை விவசாயத்திற்குத் தேவையான முழுமையான உயர் தரத்திலான உரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373