எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொரோனா தடுப்புக் செயலணிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
மேலும், இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.