Date:

வேலை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐக்கிய அரபு இராச்சியம்

2022 ஜனவரி 1 முதல் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறைமையினை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய ரீதியில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை என்பதை விடவும் குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் மாறியுள்ளது.

வேலை வாரம் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகலுடன் முடிவடையும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, ஒரு நாளைக்கு 8 1/2  வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஊழியர்கள் 4 1/2   மணி நேரம் வேலை செய்வார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த நடவடிக்கை தொழில் -வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...