Date:

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இலங்கை அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.

இந்த அடையாள இலக்கத்தை, தேசிய அடையாள அட்டையை தயாரிக்க பயன்படுத்துவதற்கும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயல்பாடுகளின்போது, பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கும் வசதியாக இருக்கும்.

முன்னதாக, ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அடையாள இலக்கங்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இனிவரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கும் அதற்கான அங்கீகரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழி ஊடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும், குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்டிக்கர் ஒட்டியவர் விடுவிக்கப்பட்டது இதனால் தான் – ஹர்ஷ

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22...

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட...

அமெரிக்க வரி குறித்த சர்வ கட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி...

கைதின் பின் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்கமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373