இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் மு.ப. 10.00 – பி.ப. 4.30 வரை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.