Date:

அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்

2021 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இதனால் சுமார் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

குருணாகல், கண்டி, பூஜாபிட்டிய, யட்டிநுவர, கம்பஹா, கட்டான, சீதுவ, ராகம, வத்தளை, நீர்கொழும்பு, மஹர, களனி, ஜா-எல, அத்தனகல்ல/வெயங்கொட, பியகம, கொழும்பு, மஹரகம, கொதடுவ, ஹோமாகம, இரத்மலானை, பத்தரமுல்ல, பிடமலை, பீட்டகொத்ததேமுல்ல தெஹிவளை, பொரலஸ்கமுவ, நுகேகொட, கொலன்னாவ, மொரட்டுவ, கடுவெல, பிலியந்தலை மற்றும் பதுளை சுகாதார பணிமானை பகுதிகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் பொது மக்கள் எப்போதும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் இடங்களை சுத்தம் செய்து கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிகரிக்கும் பதற்றம் : காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய...

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...