மின் உற்பத்தி நிலையங்களில் சேவையாற்றும் பொறியியலாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் பல பகுதிகளுக்கும் அநுராதபுரம், ஹபரணை, லக்சபான – அதுருகிரிய மற்றும் கொத்மலை – பியகம ஆகிய மின் விநியோக பாதைகளுக்கான மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.