Date:

அடுத்த வருடம் அதானி இலங்கை வருவது ஏன்?

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை இந்தியாவின் அதானி குழுமம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமத்துடன்  உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இந்தியாவின் அதானி குழுமம், நிர்மாணித்தல், செயற்படுத்தல், பரிமாற்றல் அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 700 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் அதானி கூட்டு நிறுவனம் ஜப்பானுடன் இணைந்து கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புக்களால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பினால் அந்த  முயற்சி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...