Date:

இன்று முதல் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள்

கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இன்று முதலாம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய திருமணங்களின் போது மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் என்ற ரீதியில் ஆகக்கூடியது 200 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு , பரந்த வெளிகளில் இடம்பெறும் திருமணங்களுக்கு 250 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு திரையரங்குகளில் ஆசன எண்ணிக்கையில் 75 சதவீதமானோருக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மண்டபங்களில் நடத்தப்படும் ஏனைய வைபங்களுக்கு அதிகபட்சம் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு , பரந்த வெளிகளில் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஒரே நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே உட்செல்ல முடியும்.

சிகை அலங்கார நிலையங்களுக்கு முன் அனுமதி பெற்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு செல்ல வேண்டும். பொருளாதார மத்திய நிலையங்கள் , வாராந்த சந்தைகள், நடமாடும் வியாபாரிகள் உரிய வழகாட்டல்களை பின்பற்றி அதன்படி செயற்பட வேண்டும்.

மத வழிபாட்டு ஸ்தளங்களில் பக்தர்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். சம்மேளனங்களை நடத்தும் போது சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதோடு, இவற்றுக்கு அதிகபட்சம் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புக்களை நடத்த முடியும். இதன் போது 50 சதவீதமானோர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

இவை தவிர தொழிற்சாலைகளிலும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

பிள்ளையானின் சகா ஒருவர் சிஐடியில் சரணடைய ஆயத்தம்! – பாதுகாப்பு அமைச்சர் பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373