Date:

திடீர் மின் விநியோகத் தடை தொடர்பில் உள்ளக விசாரணை

மின்சார சபை கட்டமைப்பின் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் வெளியேறியமையே, நேற்று ஏற்பட்ட திடீர் மின் தடையை வழமைக்கு கொண்டுவர தாமதமானமைக்கான காரணமாகும் என மின்சார தொழிநுட்ப, பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த மின்தடை இயற்கை காரணங்களால் இடம்பெற்றதா? அல்லது திட்டமிட்ட ஒன்றா? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.யு நிஸாந்த கோரியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளுக்கு திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துவரும் மின்சார பொறியியலாளர்களின் தலையீட்டுடன் அதனை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...