சந்தைகளில் இருக்கும் சமையல் எரிவாயு தரத்தை பரிசோதனை செய்வதற்காக 7 மாவட்டங்களிலிருந்து மாதிரிகளை பெற்று, அவற்றின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளாா்.
சமையல் எரிவாயு தொடர்பில் இயல்பு நிலைக்கு மாறான சம்பவங்கள் கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அதுதொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது தரப்படுத்தல் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.