Date:

மிக ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு பெயர் சூட்டப்பட்டது

புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), ‘Omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா, பீட்டா, டெல்டா) முறைமைக்கு அமைய அதன் 15ஆவது எழுத்தான ‘Ο’ ஒமிக்ரோன் (‘Omicron’) என பெயரிடப்பட்டுள்ளது.

(கிரேக்க அரிச்சுவடி Α αΒ βΓ γΔ δΕ εΖ ζΗ ηΘ θΙ ιΚ κΛ λΜ μΝ νΞ ξΟ οΠ πΡ ρΣ σ/ς, Τ τΥ υΦ φΧ χΨ ψ, and Ω ω.)

குறித்த கொரோனா வைரஸ் திரிபானது, முதன் முதலில் நவம்பர் 24ஆம் திகதி தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இத்திரிபானது அதிகளவான மாறுபட்ட மரபணுவைக் கொண்டுள்ளதாக (mutation) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதுடன், இதில் பல மரபணுக்களுடனான வைரஸ்கள் மிக பாதிப்பை ஏற்படுத்துபவையாக கண்டறியப்பட்டுள்ளது.

 

குறிப்பாக மீள்தொற்று (reinfection) மிக வேகமானதாக அமைகின்றது என WHO குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் பல்வேறு நாடுகளும் தென்னாபிரிக்காவிலிருந்து வருவோருக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.

தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, ஈஸ்வதினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இங்கிலாந்திற்குள் நுழைய முடியாது என அந்நாடு அறிவித்துள்ளது. இங்கிலாந்து அல்லது ஐரிஷ் நாட்டவர்கள் அல்லது இங்கிலாந்தில் வசிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mutation: வழக்கமாக உயிரினங்களில் ஏற்படும் புதிய கல உருவாக்கத்தின் போதான கலப் பிரிகையின் போது, அதில் ஏற்கனவே உள்ள DNA (மரபணு) அமைப்பு அவ்வாறு பிரதி செய்யப்படுகின்றன. ஆயினும் ஏற்படும் சில பிரச்சினைகளால் அந்த மரபணுவில் மாற்றமாக பிரதி செய்யப்படுகின்ற மரபணு அமைப்பானது Mutation எனப்படுகின்றது. (இது விஞ்ஞான ரீதியாக குளறுபடிகளால் ஏற்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது)

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது இவ்வாறான பல Mutation களை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...