Date:

பொலிஸ் மா அதிபரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்னவுக்கு மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு “ட்ரயல் அட் பார்” நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதியன்று மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும், அதனை உதாசீனம் செய்த குற்றச்சாட்டே பூஜித் ஜெயசுந்தர மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...