Date:

குறிஞ்சாங்கேணியில் இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ள படகு சேவை!(photos)

குறிஞ்சங்கேணி பாலத்தில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் வரை அப்பகுதியில் வசிப்பவர்கள் கடற்படையின் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியும்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணியினால் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் களப்பினை கடக்க எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதற்கிணங்க கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் நவம்பர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையினர் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட படகு ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடற்படையின் இந்த படகு காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் சேவையில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...