Date:

இலங்கையில் ஆபத்தான இடங்களை அடையாளம் காட்டும் புதிய செயலி கண்டுபிடிப்பு

இலங்கையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இலகுவாக அடையாளம் காணக்கூடிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர், கையடக்க தொலைபேசி செயலி அந்த இடங்களை காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்த கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...