Date:

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்குண்ட மூவரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக   ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில்  மூவர் காணாமல் போயுள்ளனர்

இதேவேளை  ரத்தினபுரி மாவட்டத்தில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்  இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக  அனர்த்த முகாமைத்துவ பிரிவின்   பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்

இதனிடையே  அத்தனகலு ஓயா களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகிய வற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹொரனை அகலவத்தை  இங்கிரிய  பாலிந்த நுவர புளத்சிங்கள  தொடாங்கொட  மில்லனிய களுத்துறை  ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...

கண்டி வீதியில் இரண்டு பேருந்துகளும் லொறி ஒன்றும் மோதி இடம்பெற்ற பாரிய விபத்து..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09)...

பதுளை பாடசாலைகளுக்கு பூட்டு!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11...

இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே  பொத்துவிலில் இருந்து  236 கி.மீ....