Date:

உரிய பரிந்துரையின்றி 10,193 மில்லியன் ரூபாவுக்கு மருந்து பொருட்கள் கொள்வனவு

மருத்துவ பொருட்கள் தொடர்பான மீளாய்வு குழுவின் பரிந்துரையின்றி, ஐந்து வருடங்களில் 10,193 மில்லியன் ரூபாவுக்கு 4,619 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அரசாங்க கணக்குகள் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

2011 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இந்தக் கொள்வனவு இடம்பெற்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவான கணக்காய்வாளரின் விசேட கணக்கு அறிக்கையை ஆராய்வதற்காக அரசாங்க கணக்குகள் குழு கூடியது.

சில சந்தர்ப்பங்களில், கொள்முதல் நடவடிக்கையில் உள்ள சிக்கல் காரணமாக, மேலதிக செலவை ஏற்கவேண்டி இருந்தாக இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 800 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் நிலைமை தொடர்பான உறுதிப்படுத்தல்களின்றி, மருத்துவ பொருட்கள் வருடாந்தம் நாட்டுக்கு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அளவிட முடியாது எனத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...