Date:

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் யுகதனவி தொடர்பில் கலந்துரையாடல்

பாதீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கெரவலப்பிட்டி – யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின்போது, பிரத்தியேகமாக சட்டத்தரணி ஒருவரை முன்னிலையாக்கும் தீர்மானம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் பின்னர், மீண்டும் கூடி, பொருத்தமான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சந்திப்பில் பங்கேற்ற லங்கா சம சமாஜக் கட்சியின் பொது செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பாதீடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த மத்திய குழுக் கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...