சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி இவ்வாறு மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அமுலாகும் வகையிலான சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் இவ்வாறு மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.