Date:

இலங்கைக்கு எதிராக ஐநா உணவு அமைப்பில் முறையிடுவதாக சீன உர நிறுவனம் எச்சரிக்கை

இலங்கைக்கு எதிராக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பில் முறையிடுவதாக சீன உர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதன உர மாதிரிகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு வலுத்துள்ளது.

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோன்டொக் நிறுவனத்தின் சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கை விவசாய திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பக்டீரியாக்கள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையின் விவசாய திணைக்களத்திடம் சீன நிறுவனம் நஷ்டஈடு கோரியுள்ளது.

சீன நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பாக இலங்கையின் சட்டமா அதிபருடன் விவசாய திணைக்களம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு எதிராக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பில் முறையிடுவதாக சீன உர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...