பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடுவெல நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு லொறி வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யாசகம் பெற்று வந்த நபர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவான விசாரணைகளை பியகம போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.






