Date:

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச நிறுவனத் தலைவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்கு தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து பொது போக்குவரத்து அல்லது குழுவாக இணைந்து பயணிக்கும் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிக்கள கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நாளாந்த போக்குவரத்துத் திட்டங்களை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* மின்சார பயன்பாட்டை குறைப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

* அலுவலகங்களில் மின்விளக்குகளுக்குப் பதிலாக இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து மின்விசிறிகளை பயன்படுத்தல்

* அவசியமற்ற நேரங்களில் மின்தூக்கிகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசியமற்ற நேரங்களில் வீதி விளக்குகளை அணைத்தல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக அவற்றை செயலிழக்கச் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...